அரசு கையில் ஆலயங்கள் – பாகம் 29 – கோவில் சொத்தை அனுபவிக்கும் அதிகாரிகள்
கோவில் சொத்தை அனுபவிக்கும் அதிகாரிகள்
உபரிநிதியை சட்ட விரோதமாக, அறங்காவலர் அனுமதியின்றி, அறநிலையத்துறை அதிகாரிகளே தன்னிச்சையாக ஊதாரித்தனமாக செலவு செய்கின்றனர்
இதற்கு ஒரு உதாரணம் ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஒரு சீராய்வு கூட்டத்திற்கு கபாலீஸ்வரர் கோவில் நிதியை எடுத்து அந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பட்டர் முறுக்கு, டிரை குலாப் ஜாமூன் மற்றும் சிற்றுண்டி, மதிய உணவு, மாலை ஸ்நாக்ஸ் போன்றவைக்கு செலவு செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இந்த உணவு வகையை அனைவருக்கும் பரிமாறுவதற்கு இரண்டு கோயில் பணியாட்களை அனுப்ப வேண்டியும் ஆணையர் கோயில் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
பக்தர்கள் கோவிலில் பக்தியோடு உண்டியலில் போடும் பணத்தினை எடுத்து அதிகாரிகள் துஷ்பிரோயகம் செய்து வருகின்றனர் என்று மிகுந்த ஆதங்கத்துடன் நம்மிடையே திரு ரமேஷ் அவர்கள் பகிர்வதைக் கேட்போம்.
இத்தொடரை தவறாமல் பாருங்கள்! பகிருங்கள்!
ஆலயம் காக்கும் பணியில் நம்மை அர்ப்பணிப்போம்!
#அறநிலையத்துறை
#HRCE