சிலப்பதிகாரம் – பாகம் 5
தெய்வகாப்பியமான சிலப்பதிகாரத்தில் அந்நூலைக் குறித்த செய்திகளையும், சில சுவையான சம்பவங்களையும் ஒரு முன்னுரையாக பார்த்துக் கொண்டு வருகிறோம்.
அந்தவகையில், இந்தப் பகுதியில் கண்ணகியை இளங்கோவடிகள் அறிமுகப்படுத்தும் போதே அவளை ஒரு பெண் தெய்வத்தின் அம்சங்களை சொல்லியே அறிமுகப்படுத்துகிறார்.
இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் மூலம் ஒரு பெண் தெய்வத்தின் வழிபாட்டை, ஆதிபராசக்தியின் அம்சமாக இந்த பெண்களைப் பார்க்கவேண்டும் என்ற கருத்தை நம் மனதில் புகுத்தவும், பெண்னை வழிபடக்கூடிய ஒரு பண்பாட்டை இந்த நிலத்தில் கொண்டுவந்து நிறுத்தவேண்டும் என்பதற்காகவே அவர் சிலப்பதிகாரத்தை படைத்தார். அந்த நோக்கத்தை அவர் சிறப்பாக நிறைவேற்றியும் இருக்கிறார் என்று சிலப்பதிகாரத்தின் பெருமைகளை தமிழாகரர். பேராசிரியர். சாமி. தியாகராசன் அவர்கள் கூற கேட்போம்!
இத்தொடரை தவறாமல் கண்டு பகிருங்கள்!
கடவுள் காப்பியமான சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகளின் பார்வையில் அறிந்து கொள்வோம்!
அடுத்தப் பகுதியிலிருந்து நாம் சிலப்பதிகாரம் கதைக்குள் செல்ல இருக்கிறோம்!