சிலப்பதிகாரம் – பாகம் 11.1 – கண்ணகி கோவலன் திருமணம் – பகுதி 2
மாசாத்துவானும், மாநாய்க்கனும் மிகப்பெரும் செல்வந்தர்கள். மாசாத்துவான் மகன் கோவலன், மாநாய்க்கன் மகள் கண்ணகி. இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி திருமணம் நடக்கிறது. இந்த திருமண அறிவிப்பானது எப்படி செய்யப்பட்டது என்பதை பின்வரும் அழகான பாடல் மூலம் இளங்கோவடிகள் வர்ணிக்கிறார்.
முரசியம்பின
முருடதிர்ந்தன
முறையெழுந்தன பணில வெண்குடை
இவர்களின் திருமண காட்சிகளை பதிவு செய்யும் இளங்கோவடிகள், திருமண மேடை நீல விதானத்திலும், வைரங்கள் பதித்த தூண்களையும், மலர் சரங்கள் போல் தொங்கிக் கொண்டிருந்த முத்து சரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தனவாம். இந்த வர்ணனயை
மாலைதாழ் சென்னி வயிரமணித் தூணகத்து
நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ் என்று தொடங்கும் பாடல் மூலம் கூறியிருக்கிறார்.
இந்த சிறப்பான திருமண வைபவ வர்ணனைகளை தமிழாகரர் பேராசிரியர் சாமி தியாகராசன் அவர்கள் கூறக் கேட்போம்.
இளங்கோவடிகளின் பார்வையில் சிலப்பதிகாரத்தை அறிவோம்!
#சிலப்பதிகாரம் #கண்ணகி #கோவலன் #புகார்காண்டம் #pugarkandam #silapathigaram