தினம் ஒரு மோடி – ஜனநாயக, சமத்துவப் புரட்சியாளர்
நம் நாட்டில் சுதந்திரம் அடைந்தப் பின் நம் பாரதத்தின் மகத்தான பாரம்பரியம், கலாச்சாரம், உண்மையான வரலாறு இவைகளை திட்டமிட்டு மறக்கடிக்கச் செய்து விட்டனர். அப்படி, மறக்கடிக்கப்பட்ட சரிதத்தில் மகான் பஸவேஸ்வரர் என்பவரின் வரலாறும் அடங்கும்.
12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பஸவேஸ்வரர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர். ஜனநாயகத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, ஏற்றத்தாழ்வுகளினால் பிளவுபட்டு இருந்த சமூகத்தை ஒருங்கிணைக்கப் பாடுபட்டவர். இவை மட்டுமல்லாமல் பெண்களுக்கு அதிகாரத்தில் பங்களிப்பதைப் பற்றியும் அன்றே சிந்தித்து செயல்படுத்தியவர் என்று பஸவேஸ்வரர் என்ற மகானைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறுவதைத் தமிழில் கேட்போம்.
#modi #மோடி #PMModi #நரேந்திரமோடி #bhasaveshwarar